நாட்டிலேயே ஆந்திராவில் தான் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்


நாட்டிலேயே ஆந்திராவில் தான் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்
x

நாட்டிலேயே ஆந்திர மாநிலத்தில் தான் அதிகளவான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

விஜயவாடா:

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

எச்.ஐ.வி-யைக் கட்டுப்படுத்தத் தொடங்கப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலிருந்து பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு உள்ளது.

புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மராட்டிய மாநிலம் 6.6 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது.குஜராத் (2.3 லட்சம்) மற்றும் டெல்லியில் 2.3 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

ஆந்திராவில் 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து கர்நாடகா (1.16 லட்சம்) மற்றும் தெலங்கானாவில் (1 லட்சம்) உள்ளனர்.

புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் பெரும்பான்மையாக இருந்தாலும், தெற்கில் அவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர், அங்கு பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் உள்ளூரை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

பல தசாப்தங்களாக ஆந்திர மாநிலம் விபசாரத்திற்கான மனித கடத்தலின் முக்கிய இடமாக உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட பட்டியலில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் இருக்கும். மிக முக்கியமாக, இந்த எண்கள் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களை மட்டுமே குறிக்கின்றன.இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆந்திராவில் இருந்து புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் நாட்டின் எந்த மாநிலத்திலும் காணப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.


Next Story