சுதந்திரதின விழாவை ஒட்டி கேரளாவில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு..!


சுதந்திரதின விழாவை ஒட்டி கேரளாவில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு..!
x

திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

சுதந்திரதின விழாவில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க வேண்டுமென கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அதில் சுதந்திரத்தினத்தன்று அனைத்து வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 'குடும்ப ஶ்ரீ' என்ற பெண்கள் குழுக்களின் மூலம் மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். இரவு நேரங்களில் தேசிய கொடியை இறக்க வேண்டியதில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேசிய கொடி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story