அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை : 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை


அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை :  13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
x

அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ர்பளித்து உள்ளது.

பாலக்காடு:

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் 2018 பிப்ரவரி 22 அன்று ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவர் கடைகளில் அரிசி திருடியதாக ஒரு கும்பல் அடித்து செய்தது. கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கபட்டு உள்ளது. இந்த வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி உபைத், நஜீப், ஜைஜுமோன், சதீஷ், சதீஷ், ஹரீஷ், பிஜி, முனீர் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து உள்ளது. இதில் அனீஷ்,அப்துல் கரீம் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கபட்டும் என

கூறப்பட்டு இருந்தது. அதன்படி 14 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிக்கபட்டது. அதன் விவரம் வருமாறு:-

குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மன்னார்க்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பதினாறாவது குற்றவாளியான முனீர் தவிர 13 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தவனூர் சிறைக்கு மாற்றப்படுவார்கள். 16வது குற்றவாளியான முனீருக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story