பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்ச்சி சான்றிதழுக்கு 4 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு

பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்ச்சி சான்றிதழுக்கு 4 லட்சம் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்ச்சி சான்றிதழுக்கு 4 லட்சம் மாணவர்கள் காத்திருப்பு
Published on

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.யு.சி. 2-ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 6.7 லட்சம் பேர் எழுதினர். ஜூன் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, இதற்கான துணை தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகள் ஜூலை 31-ந் தேதி வெளியானது.

தற்போது 4.20 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில் அந்த மாணவர்களுக்கு தேர்சி சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என அவர்களது பெற்றோர் கூறுகின்றனர். இதுதொடர்பாக பி.யு.கல்லூரி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com