புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - சபாநாயகர் செல்வம்


புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - சபாநாயகர் செல்வம்
x

புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டதொடர் இன்று காலை தொடங்கியது. கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்து தி.மு.க-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை மீது நாளையும், நாளை மறுநாளும் விவாதம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகம் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். கவர்னர் உரை மீதான விவாதம் வேறு தேதியில் நடைபெறுமெனவும் என அவர் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட்டை விரைவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைக்கும் என சபாநாயகர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story