பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசாா் சோதனை; கைதிகள் பதுக்கிய 30 செல்போன்கள் பறிமுதல்


பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசாா் சோதனை; கைதிகள் பதுக்கிய 30 செல்போன்கள் பறிமுதல்
x

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் சோதனை நடத்தி ௩௦ செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு:

சிவமொக்கா மாவட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகரான ஹர்ஷா கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் கைதான நபர்கள், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் செல்போன் பயன்படுத்தி வருவதாகவும், வீடியோ அழைப்பு மூலமாக பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில், போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சிறை முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சிறையின் பல்வேறு பகுதிகளில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த 30 செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் போலீசாருக்கு சிக்கியது.

ஆனால் எந்த ஒரு கைதியிடமும் செல்போன், சிம் கார்டுகள் சிக்கவில்லை. அதே நேரத்தில் நாகேந்திரா என்ற கைதியிடம் போலீசார் சோதனை நடத்த முயன்றாா்கள். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சிறையில் செல்போன்கள் சிக்கிய விவகாரம் தொடா்பாக தனியாக ஒரு வழக்கும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கைதி நாகேந்திரா மீது தனியாக மற்றொரு வழக்கும் பதிவு செய்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

1 More update

Next Story