6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்


6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்
x

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் கடந்த திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 6 பேரை விடுவித்து நவம்பர் 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story