சத்தீஷ்காரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின


சத்தீஷ்காரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின
x

மின்பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க தீயணைப்புத்துறை போராடி வருகின்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரத் மாதா சவுக் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ தொடர்ந்து பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை தீ அணைக்க போராடி வருகின்றனர். மேலும் அந்த மின்பகிர்மான நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்களை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

தீ மிகவும் கடுமையாக இருப்பதால், அதை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை தெரியவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story