துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்கும் நகரசபை உறுப்பினர்


துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்கும் நகரசபை உறுப்பினர்
x

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை நகரசபை உறுப்பினர் கேட்டுள்ளார்.

சிக்கமகளூரு: சிக்கமகளூரு நகரசபை தலைவராக இருப்பவர் வேணுகோபால். பா.ஜனதாவை சேர்ந்தவர். மேலும், நகரசபை உறுப்பினராக ஜனதா தளம் (எஸ்) கட்சிைய சேர்ந்த குமார் உள்பட பலர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நகரசபையில் தூய்மை பணியாளராக வேலை செய்த ஒருவரை சாதியை குறிப்பிட்டு அதிகாரி ஒருவர் திட்டியதாக குமார் போலீசில் புகார் அளித்தார்.

அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. மேலும், அவர் நகரசபையில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடந்த சில நாட்களாக கொலை மிரட்டல்கள் வருவதாக கூறிய குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story