ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!


ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!
x

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன். 1.05 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

ஜெய்ப்பூர்,

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகின்றது.

தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் இணைந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், முக்கிய வாக்குறுதிகளாக

* விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன். 1.05 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

*400 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படும்.

*சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

*4 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும்.

* 10 லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.

* சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படும்.

* மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும்.

*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

*குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும்.

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும்.

*கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

*அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும்

பல்வேறு சுவாரஸ்யமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியுள்ளது.


Next Story