தலைநகர் டெல்லியில் மேலும் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா உறுதி


தலைநகர் டெல்லியில் மேலும் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா உறுதி
x

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 82 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.


Next Story