அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
Published on

லக்னோ,

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி வரும் ஜூலை 2-ந்தேதி வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com