டெல்லி மாநகராட்சி தேர்தல்- பாஜகவை முந்தியது ஆம் ஆத்மி: 129 வார்டுகளில் முன்னிலை


டெல்லி மாநகராட்சி தேர்தல்- பாஜகவை முந்தியது ஆம் ஆத்மி: 129 வார்டுகளில் முன்னிலை
x

மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி

கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 129வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 106 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கதிபூர், சாந்த்நகர், ஜரோடா ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது


பாஜகவின் அல்கா ராகவ் லட்சுமி நகர் தொகுதியிலும், ரிது கோயல் ரோகினி வார்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


Next Story