நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் திரவுபதி முர்மு

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வரும் 25-ம் தேதி பதவி ஏற்கிறார் திரவுபதி முர்மு.
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் திரவுபதி முர்மு
Published on

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி.நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே.

இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்.

பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார். மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும்.

இந்நிலையில், திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com