பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு - 'அசால்ட்டாக' நின்ற முதல்-மந்திரி


பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு - அசால்ட்டாக நின்ற முதல்-மந்திரி
x

கவலைப்பட வேண்டாம், பாம்பை யாரும் அடிக்க வேண்டாம் என முதல்-மந்திரி கூறினார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக பூபேஷ் பாகல் உள்ளார்.

இந்நிலையில், முதல்-மந்திரி பூபேஷ் பாகல் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அந்த கூட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அங்கிருந்தவர்கள் ஓட முயற்சித்தனர்.

அப்போது, எந்த வித பதற்றமுமின்றி முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அசால்ட்டாக நின்றார். மேலும், கவலைப்பட வேண்டாம். பாம்பை யாரும் அடிக்கவும் வேண்டாம்' என்றார். சிறிது நேர பரபரப்பிற்கு பின் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்றது.




Next Story