சிவசேனா சின்னம் யாருக்கு? வரும் டிச.12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை


சிவசேனா சின்னம் யாருக்கு? வரும் டிச.12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை
x

சிவசேனா சின்னம் யாருக்கு ? என்பது தொடர்பாக முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி இரு அணிகளாக உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா பிளவு பட்டுள்ளது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன.

இதனால், சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பாக வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. சிவசேனாவின் இரு அணிகளும் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி 5 மணிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


Next Story