இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவி காலம் மேலும் 16 மாதம் நீட்டிப்பு...!


இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவி காலம் மேலும் 16 மாதம் நீட்டிப்பு...!
x

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக வினய் மோகன் குவத்ரா கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் அடுத்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், வினய் மோகன் குவத்ரா பதவிக்காலத்தை மேலும் 16 மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2024 ஏப்ரல் 30-ம் தேதி வரை குவாத்ரா பணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான வினய் மோகன் குவாத்ரா, நேபாளத்துக்கான தலைமை தூதராக பணியாற்றி வந்தார். வினய் மோகன் குவாத்ரா கடந்த 1988-ம் ஆண்டில் வெளியுறவுத் துறை பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story