பேரிடர் காலங்களில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
பேரிடர் காலங்களில் நடக்கும் மீட்பு பணி மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதுடெல்லி,
பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் இன்னும் சில ஆண்டுகளில் 40 நாடுகள் இணைய உள்ளன. இந்த மாநாடு, வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள், சிறிய மற்றும் பெரிய நாடுகள், வட மற்றும் தென் துருவங்கள் ஒரே தளத்தில் வருவதற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி கொடுக்கிறது.
பேரிடர் காலங்களில், யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். போக்குவரத்து உள்கட்டமைப்பில், சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு முக்கியம். ஐரோப்பா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட சூரிய அலை, சூறாவளி மற்றும் துருக்கி, சிரியாவில் பூகம்பம் உள்ளிட்ட சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவுகள், உலகம் ஏற்பட்ட சவால்களை எடுத்து காட்டுகிறது.
இவ்வாறு மோடி பேசினார்.