சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு


சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு
x

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

புதுடெல்லி,

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதேபோல், 1 வருட, 2 வருட, 3 வருட மற்றும் 5 வருட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 1.1 சதவீதம் அதிகரித்து உயர்த்தியது.

1 More update

Next Story