ஜி 20 மாநாடு: விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத்தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் - காங். குற்றச்சாட்டு


ஜி 20  மாநாடு: விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத்தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் - காங். குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Sep 2023 6:38 AM GMT (Updated: 5 Sep 2023 7:20 AM GMT)

பாரத் குடியரசு தலைவர் என அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது மாநிலங்களில் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.


Next Story