சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை - துஷார் காந்தி


சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை - துஷார் காந்தி
x

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை என மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இருந்து இன்று காலையில் தொடங்கிய பாரத் ஜோடோ ஷேகன் நகரை அடைந்தது. ஷோகன் நகரில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.

மேலும், நடைபயணங்கள் கலாசாரத்தின் ஒரு அங்கம், பல புரட்சிகளுக்கு வழி வகுத்துள்ளன என்று இந்திய ஒற்றுமை பயணம் குறித்து துஷார் காந்தி தெரிவித்தார்.

இதேபோன்று, சாவார்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது, சிறையில் இருந்த வெளியே வர மன்னிப்பு கடிதம் எழுதியது எல்லாம் மறுக்க முடியாத உண்மை. இதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story