காஷ்மீரில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பயங்கரவாதிகள் கைது


காஷ்மீரில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பயங்கரவாதிகள் கைது
x

கோப்புப்படம்

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் அலூசா, கெனுசா இடையே கடந்த 27-ந் தேதி பயங்கரவாதிகள் 2 வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். ராணுவ வாகனம் ஒன்று அந்த வழியாக சென்றபோது, இந்த பயங்கரம் நடந்தது.வீரியம் குறைந்த இந்த குண்டுகள் வெடித்ததில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

எனினும் ராணுவ வாகனத்தை குறிவைத்து நடத்திய இந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கெனுசாவை சேர்ந்த வசீம் ராஜா மற்றும் இர்ஷாத் கனி என்ற ஷாகித் ஆகிய 2 பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாதிகள் இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதன் மூலம் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த மர்மம் விலகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story