மழையால் திடீர் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்


மழையால் திடீர் நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
x

கோப்புப்படம் 

நிலச்சரிவு காரணமாக காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள்சிக்கித் தவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட ஏறக்குறைய 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையின் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றன.


Next Story