மணிப்பூர் கொடூரம் எதிரொலி: குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய மெய்தி இன பெண்கள்.!


மணிப்பூர் கொடூரம் எதிரொலி: குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய மெய்தி இன பெண்கள்.!
x
தினத்தந்தி 21 July 2023 4:12 AM GMT (Updated: 21 July 2023 5:18 AM GMT)

மணிப்பூர் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர்

இம்பால்,

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே, 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொடூர செயலை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹேராதாஸ் (32) என்பவரின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர்.

ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்


Next Story