தாம்பத்யத்திற்கு மறுத்ததால் பீகார் புதுப்பெண் கொலை


தாம்பத்யத்திற்கு மறுத்ததால் பீகார் புதுப்பெண் கொலை
x

தாம்பத்யத்திற்கு மறுத்ததால் பீகாரை சேர்ந்த புதுப்பெண்ணை கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். திருமணம் ஆன 9 மாதத்தில் இந்த பயங்கரம் நடந்து உள்ளது.

பெங்களூரு:

தாம்பத்யத்திற்கு மறுத்ததால் பீகாரை ேசர்ந்த புதுப்பெண்ணை கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். திருமணம் ஆன 9 மாதத்தில் இந்த பயங்கரம் நடந்து உள்ளது.

பொய்யான வயது

பீகார் மாநிலம் சீதாமர்கி பகுதியை சேர்ந்தவர் பிருத்விராஜ் (வயது 38). இவர் பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாருதி லே-அவுட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மேலும் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பிருத்விராஜிக்கும், பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி (28) என்பவருக்கும் திருமணம் நடந்து இருந்தது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் ஜோதி குமாரியை, பிருத்விராஜ் பெங்களூருவுக்கு அழைத்து வந்து இருந்தார். இந்த நிலையில் திருமணத்தின் போது தனக்கு 30 வயது என்று ஜோதி குமாரியிடம், பிருத்விராஜ் பொய் கூறியதாக தெரிகிறது. இதுபற்றி திருமணத்திற்கு பின்னர் ஜோதி குமாரிக்கு தெரியவந்து உள்ளது. இதனால் அவர் பிருத்விராஜிடம் சண்டை போட்டு வந்து உள்ளார்.

மாயமானதாக புகார்

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி மடிவாளா போலீஸ் நிலையத்திற்கு சென்ற பிருத்விராஜ் தனது மனைவி ஜோதிகுமாரியை 2 நாட்களாக காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி புகார் அளித்தார். அதன்பேரில் மாயமான ஜோதி குமாரியை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் பிரித்விராஜின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதாவது அவர் ஜோதி குமாரியை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து உடலை ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருேக சார்மடி வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இதனால் பிரித்விராஜை போலீசார் கைது செய்தனர்.

தாம்பத்யத்திற்கு மறுப்பு

பின்னர் சார்மடி வனப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த ஜோதிகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். கைதான பிருத்விராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது வயதை மறைத்து திருமணம் செய்ததால் பிரித்விராஜிடம், ஜோதிகுமாரி தகராறு செய்து உள்ளார். மேலும் தாம்பத்யத்தில் ஈடுபட ஜோதிகுமாரி மறுத்து உள்ளார்.

இதுதவிர அவர் செல்போனில் யாரிடமோ அடிக்கடி பேசியும் வந்து உள்ளார். இதனால் ஜோதி குமாரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்த பிருத்விராஜ், ஜோதி குமாரியை கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் தனது நண்பரான சமீரிடம் கூறியுள்ளார். இதன்பின்னர் 2 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி ஜோதிகுமாரியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

கழுத்தை இறுக்கி கொலை

அதன்படி ஜோதி குமாரியிடம் உடுப்பிக்கு சுற்றுலா சென்று வரலாம் என்று கூறி காரில் பிருத்விராஜ் அழைத்து சென்றார். அவர்களுடன் சமீரும் சென்று இருந்தார். சார்மடி வனப்பகுதியில் சென்ற போது ஜோதி குமாரியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி 2 பேரும் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியுள்ளனர். பின்னர் மனைவி மாயமாகி விட்டதாக போலீசில் புகார் கூறி நாடகமாடியது தெரிய வந்தது.

பிருத்விராஜ் கைதாகி இருக்கும் நிலையில் தலைமறைவாக உள்ள சமீரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story