இந்தியா கூட்டணியில் சேர அழைக்காதது குறித்து எனக்கு கவலை இல்லை - அசாதுதீன் ஓவைசி


இந்தியா கூட்டணியில் சேர அழைக்காதது குறித்து எனக்கு கவலை இல்லை - அசாதுதீன் ஓவைசி
x

இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி தான் இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணி கட்சிகள் இதுவரை மூன்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளது.

இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்திய கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-

இந்தியா கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து எனக்கு கவலை இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் மற்றும் மராட்டியாவை சேர்ந்த பல கட்சிகளும் இந்த கூட்டணியில் உறுப்பினர்களாக இல்லை.

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சி.ஆரை முன்னோக்கிச் சென்று மூன்றாவது அணியை உருவாக்கி, இதில் பல கட்சிகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கே.சி.ஆர் தலைமை ஏற்றால் அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும் என்றார்.


Next Story