"எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்" - ராகுல் காந்தி பேச்சு


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம் - ராகுல் காந்தி பேச்சு
x

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

பாட்னா,

பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது இரு சித்தாந்தத்திற்கு இடையிலான போர். ஒரு பக்கம் காங்கிரசின் ஒற்றுமை சித்தாந்தம். மறுபக்கம் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரிவினை சித்தாந்தம்.

வெறுப்புணர்ச்சியை அன்பால்தான் வெல்ல முடியும், வெறுப்பால் வெல்ல முடியாது. பா.ஜனதா வன்முறை, வெறுப்பை பரப்புதல், நாட்டை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் அமைதி, ஒற்றுமைக்காக வேலை செய்து வருகிறோம். இங்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வந்துள்ளனர். ஒன்றிணைந்து பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

கர்நாடகாவில் வெற்றி பெற்றதுபோல் தெலுங்கானா, சத்திஸ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ஜனதா எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் மாற்றத்தை பார்ப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் ஏழை மக்கள் பக்கம் நிற்கிறோம். பா.ஜனதா என்றால் 2 அல்லது 3 பேருக்கு ஆதாயம் கிடைப்பது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story