வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
Published on

வாரணாசி,

7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார். 

இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகலில் பிரதமர் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் அங்கு சுமார் 5 கிமீ தொலைவிற்கு மீண்டும் வாகன பேரணி செல்கிறார். அப்போது அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வாகன பேரணியில் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க.வினர் பல சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com