வரும் 22-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ..!


வரும் 22-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ..!
x

அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது .

புதுச்சேரி,

வரும் .22-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. இதில் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது .

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இது தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியதாவது,

2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதல்-மந்திரி ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story