மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மங்களூரு:

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பரத்(வயது 30). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் ஒரு மைனர் பெண்ணை திருமண ஆசை வார்த்தைகள் கூறி காரில் கடத்திச் சென்றார். அவர் பெங்களூருவுகு அந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குந்தாப்புரா போலீசார் பரத்தை கைது செய்தனர்.


மேலும் அந்த மைனர் பெண்ணையும் மீட்டனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து பரத்துக்கு எதிராக உடுப்பி போக்சோ கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அவர் வழக்கில் குற்றவாளியான பரத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனயும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பரத்தை உடுப்பி சிறையில் அடைத்தனர்.


Next Story