திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன முன்பதிவு 18-ம் தேதி தொடக்கம்


திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன முன்பதிவு 18-ம் தேதி தொடக்கம்
x

பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன முன்பதிவு வரும் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அந்த நாட்களில் இலவச தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story