கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை


கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
x

கோப்புப்படம்

தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த 25-ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, காலியாகி இருக்கும் அந்த இடத்துக்கு நீதிபதியை நியமிப்பது குறித்து கொலிஜியம் பரிசீலித்தது.

பின்னர் கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.

ஐகோர்ட்டு நீதிபதிகளில் மிகவும் மூத்த நீதிபதியும், எஸ்.சி. பிரிவை சேர்ந்த ஒரே ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும் பிரசன்னா பி.வரலே என்பதையும் கொலிஜியம் கருத்தில் கொண்டதாக சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிபதிகளின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு காலியிடத்தை விரைவாக நிரப்புவது அவசியமானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story