தாலுகா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கலபுரகியில் தாலுகா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கலபுரகி:
கலபுரகி தாலுகாவை சேர்ந்தவர் சரண்பசப்பா பட்டீல் (வயது 32). இவர் தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது உயர் அதிகாரிகளில் தொல்லை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





