நடுக்கடலில் படகு மூழ்கியது; 10 மீனவர்கள் உயிர் தப்பினர்


நடுக்கடலில் படகு மூழ்கியது; 10 மீனவர்கள் உயிர் தப்பினர்
x

மங்களூரு அருகே நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் பயணித்த 10 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மங்களூரு;

நடுக்கடலில் படகு மூழ்கியது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் 10 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க நேற்று காலை சென்றனர்.

அப்போது மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் அலை சீற்றத்துடன் சூறாவளி காற்று வீசியது. இதனால் தாக்குப்பிடிக்க முடியாமல் கடலில், படகு மூழ்கியது.

10 மீனவர்கள் மீட்பு

இதில் 10 மீனவர்களுக்கு,கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக மற்ற படகுகளில் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள், கடலில் மூழ்கி தத்தளித்த 10 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். ஆனாலும் அவர்கள் மீன்பிடிக்க சென்ற படகு, கடலில் மூழ்கிவிட்டது.


Next Story