கட்டிட தொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர்கள்


கட்டிட தொழிலாளியை தாக்கி கொன்ற நண்பர்கள்
x

ஹாசன் தாலுகாவில், மது குடித்ததை பெற்றோரிடம் தெரிவித்த கட்டிட தொழிலாளியை அவரது நண்பர்களே தாக்கி கொன்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஹாசன்:-

கட்டிட தொழிலாளி

ஹாசன்(மாவட்டம்) தாலுகா சிக்ககேனிகெரே கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகாஷ்(வயது 38). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரது நண்பர்கள் புனித் மற்றும் பிரசாந்த். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ஒன்றாக மது குடித்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் புனித்தின் பெற்றோர் அவர் மது குடித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பி கண்டித்தனர். மேலும் அவர்கள் பிரகாசை தொடர்பு கொண்டு பேசி, புனித் மதுபானம் குடித்தது குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

அப்போது புனித் மதுபானம் குடித்தது பற்றி அவரது பெற்றோரிடம் பிரகாஷ் தெரிவித்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த புனித், பிரசாந்துடன் சேர்ந்து பிரகாசின் வீட்டிற்கு சென்றார்.

தீவிர சிகிச்சை

அங்கு அவர்கள் பிரகாசிடம் மதுபானம் குடித்தது பற்றி பெற்றோரிடம் கூறியது கேட்டு தகராறு செய்தனர். மேலும் சரமாரியாக பிரகாசை அவர்கள் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹாசன் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story