மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x

குவெம்பு அருகே, மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு;


மைசூரு டவுன் குவெம்பு பகுதி எம்.பிளாக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லக்‌ஷம்மா (வயது 65). அவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு நடைபயிற்சி மேற்கொள்ள சென்றார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், லக்‌ஷம்மா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து குவெம்பு போலீசில் புகார்் அளித்தனர்.

இதில் பறித்து சென்ற தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.


Next Story