பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு

பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு.
பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது. பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.

* நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்ந்துள்ளது.

* சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது.

* நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 4,000 ரூபாயிலிருந்து 6,377 ரூபாயாக அதிகரிப்பு

* சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 3,750 ரூபாயிலிருந்து 6,760 ரூபாயாக அதிகரிப்பு

* சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் 2,560 ரூபாயிலிருந்து 4,600 ரூபாயாக அதிகரிப்பு

* பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் எனவும் தகவல்

* ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி, குருகிராம் மற்றும் ஸ்பர் முதல் துவாரகா எக்ஸ்பிரஸ்வே வரை மெட்ரோ இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.5,452 கோடி செலவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com