தன் வினை தன்னை சுடும்...பைக்கில் சென்று கொண்டிருந்தவரை ஓங்கி உதைத்த பெண்...தலைகுப்புற விழுந்தார்...!


தன் வினை தன்னை சுடும்...பைக்கில் சென்று கொண்டிருந்தவரை ஓங்கி உதைத்த பெண்...தலைகுப்புற விழுந்தார்...!
x

மும்பையில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், பக்கத்தில் சென்று கொண்டிருந்த பைக்கை உதைத்த போது நிலைத்தடுமாறு தலைகுப்புற விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை,

மும்பையில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், பக்கத்தில் சென்று கொண்டிருந்த பைக்கை உதைத்த போது நிலைத்தடுமாறு தலைகுப்புற விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இளைஞர் தனது தோழியுடன் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அவர்கள் தாறுமாறாக சாலையில் போகவே, பின்னால் ஸ்கூட்டரில் வந்த இளைஞர் ஒருவர், "ஏன் இப்படி பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்" எனக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் தங்கள் வழியில் செல்ல, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ தங்களை பார்த்து செல்லுமாறு கூறிய இளைஞரின் மோட்டார் சைக்கிளை மிதிக்கிறார். ஆனால் அடுத்த நொடியே இவர் நிலைத்தடுமாறு ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தலைகுப்புற விழுகிறார். இதனை பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது டிரெண்டாகி வருகிறது.

வண்டியை தாறுமாறாக ஓட்டியதை கேள்வி கேட்டதால் வெகுண்டெழுந்து அந்த பெண் செய்த தவறான செயல், அவருக்கே பாதகமாக மாறியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருவது ஒருபுறம் இருக்க, வரம்பு மீறி சென்ற அந்தப் பெண்ணை சமூகதளவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Next Story