மேற்கு வங்காள முதல்-மந்திரி ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முடிவு


மேற்கு வங்காள முதல்-மந்திரி ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முடிவு
x

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வருகிற டிசம்பரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்து உள்ளார்.



புதுடெல்லி,


ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம்.

நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறினார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் நிறைந்த, முடிவான மற்றும் செயல் சார்ந்து இருக்கும்.

அடுத்த ஓராண்டில், கூட்டு நடவடிக்கைக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான, சர்வதேச முதன்மை இயக்கம் ஆக ஜி-20 அமைப்பை பணியாற்றும் வகையில் செய்வது எங்களது கடுமையான முயற்சியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவராக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதன்படி, டெல்லியில் வருகிற டிசம்பர் 5-ந்தேதி நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

இதன்பின்பு, வருகிற டிசம்பர் 12 முதல் 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் மேகாலயாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று மேற்கு வங்காள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story