மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்


மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்
x

பெங்களூருவில், மாணவரிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்.

பெங்களூரு:

பெங்களூரு கட்டிகேனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வசிப்பவர் சந்தோஷ். இவர், ஒரு கல்லூரியில் படிக்கிறார். கடந்த மாதம்(மே) 18-ந் தேதி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு வந்த சந்தோசிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றிருந்தனர்.

இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவர் சந்தோசிடம் செல்போன் பறித்ததாக ஒய்சாலா லே-அவுட்டை சேர்ந்த சிவக்குமார்(வயது 20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story