சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட "பீர்" விற்பனை..!


சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீர் விற்பனை..!
x

சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட ‘பீர்’ விற்பனைக்கு வர உள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட 'பீர்' விற்பனைக்கு வர உள்ளது.

கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகிறது. அதாவது இந்த கழிவு நீர், முதலில் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீர் ஆகும்.

பொதுவாக பீர் தயாரிப்புக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. உண்மையில் இந்த மதுபானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமானது தண்ணீர் தான்.

சிங்கப்பூரின் தண்ணீர் வாரியம், இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்து 'நியூ-ப்ரியு' என்ற பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதன்மையாக கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

சமீப ஆண்டுகளில் அந்நாட்டில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும். சிங்கப்பூர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், அவற்றை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான வழிகளில் இதுவும் ஒன்று ஆகும்.

'நியூ-வாட்டர்' என்பது வடிகட்டப்பட்ட திரவமாகும், இது கழிவுநீரில் இருந்து உருவாகிறது. சிங்கப்பூர் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் கழைவுநீரை, மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவு நீரை கொண்டு, சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை இப்போது பூர்த்தி செய்ய முடியும் என்று அந்நாட்டின் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது சுகாதாரமற்ற முறையாக தோன்றினாலும், 'நியூ-வாட்டர்' அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், பெரிதும் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, அதன் பிறகே உபயோகத்துக்கு வருகிறது. நாட்டில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் இந்த பீர் விற்பனைக்கு வர உள்ளது.


Next Story