தமிழாய்வு இருக்கை சார்பில் 100 நூல்களை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழாய்வு இருக்கை சார்பில் 100 நூல்களை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 March 2024 6:00 AM GMT (Updated: 9 March 2024 6:12 AM GMT)

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழாய்வு இருக்கை சார்பில் நூறு நூல்களை வெளியிட்டார்

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் இன்று 100 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 100 நூல்களை வெளியிட்டார்.

கலைஞரின் சிறுகதைகள், சமுதாய சிந்தனைகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் 100 அறிஞர்கள் எழுதிய 100 புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்பின்னர், 100 நூல்களை எழுதிய அறிஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட 100 நூல்களின் பெயர்கள் மற்றும் அந்நூல்களின் ஆசிரியர்கள் விவரம் பின்வறுமாறு:-

1. கலைஞரின் தமிழ்வழிக் கல்விக் கனவு – மருத்துவர் சு.நரேந்திரன்

2. KALAIGNAR'S WORLD OF LITERATURE – Dr. B. ILANGO

3. கலைஞர் கண்ட அய்யனும் அடிகளும் – மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி

4. கலைஞரும் வள்ளுவரும் – முனைவர் வி.ஜி.சந்தோசம்

5. கலைஞரின் கவிதை மழையில் நனைந்தேன் – முனைவர் சரசுவதி இராமநாதன்

6. கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம் – முனைவர் உலகநாயகி பழனி

7. கலைஞர் படைப்புலகம் – கவிஞர் சண்.அருள்பிரகாசம்

8. ஐந்தமிழ் அறிஞர் கலைஞர் – முனைவர் சண்முக.செல்வகணபதி

9. வரலாற்றில் கலைஞர் கேள்விகள் ஆயிரம் – முனைவர் மு.கலைவேந்தன்

10. கலைஞரே ஒரு கவிதைதான் – பாவலர் நொச்சிப்பூந்தளிரன்

11. கலைஞரின் மேடைத்தமிழ் – முனைவர் பா.வேலம்மாள்

12. கலைஞர் பிள்ளைத்தமிழ் – புலவர் பூவை. சு.செயராமன்

13. கலைஞரும் வீறுகவியரசரும் – பாரி முடியரசன்

14. கலைஞரின் திருக்குறள் வெளிப்பாட்டுத்திறன் – முனைவர் கலைமகள் சிவஞானம்

15. கலைஞர் செம்மொழி தமிழும் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் – முனைவர் இரா.இராசாமணி

16. கலையும் கலைஞரும் – முனைவர் அருட்செல்வி கிருபை ராசா

17. கலைஞர் சிறுகதைகளில் புரட்சி – புலவர் ப.கனகரத்தினம்

18. கலைஞரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உவமைகள்– முனைவர் இளமதி சானகிராமன்

19. உடன்பிறப்பே – முனைவர் ம.மணிமேகலை

20. கலைஞரின் சாதனைகள் 100 – முனைவர் கவிதை கணேசன்

21. கலைஞரின் திரைத்தமிழ்தேன் – கவிஞர் ஆவராணி ஆனந்தன்

22. நாட்டுப்புறப்பாடல்களில் கலைஞர் புகழ் பாடல்கள் நூறு – வளப்பக்குடி கவிஞர் வீரசங்கர்

23. கலைஞரின் திருக்குறள் உரை நெறி – முனைவர் கி.சிவகுமார்

24. கலைஞரின் இளமைப்பருவமும் வாழ்வியல் மொழிகளும் – டாக்டர் வா.செ.செல்வம்

25. கலைஞரின் நகைச்சுவை – மருத்துவர் ந.௲னியர் சுந்தரேஷ்

26. கலைஞரும் தொல்காப்பியரும் – முனைவர் வெ.அ.நாகரெத்தினம்

27. கலைஞர் ஒரு காலக்கண்ணாடி – முனைவர் பி.கணேஷ்

28. கலைஞரின் தேனலைகள் – முனைவர் பி.ரகமத் பீபி

29. கவிதை வரலாற்றில் கலைஞர் – முனைவர் இரா.தண்டபாணி

30. கலைஞரின் இலக்கியக் கொடை – முனைவர் ச.முருகேசன்

31. கலைஞரின் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் – முனைவர் க.அழகர்

32. கலைஞரின் புதினங்களில் காரிகையர் – பேரா. கு.ஜெயசித்ரா

33. கலைஞரின் அனல்பறக்கும் வசனங்கள் – சரசுவதி அரிகிருஷ்ணன்

34. கலைஞர் குறளோவியத்தின் எழிலோவியங்கள் – முனைவர் பூ.லலிதபாலா

35. தொல்காப்பியப்பூங்காவில் கலைஞரின் கவின்மணம் – கவிஞர் ச.குமரவேல்

36. கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் தேதியும் சேதியும் – க.கண்ணகி

37. குறளோவியத்தில் கலைஞரின் ஆளுமையும் பன்முக ஆற்றலும் – வழக்கறிஞர் க.கணேசன்

38. வரலாற்று நோக்கில் கலைஞரின் பொன்னர் சங்கர் – கோ.பிரவினா சேகர்

39. கலைஞரின் திரைப்பயணம் – கவிஞர் தமிழ்க்கனல்

40. கலைஞரின் கவிதைகளில் பகுத்தறிவும் பண்பாடும் – பாவரசு முகவை திருநாதன்

41. கலைஞரின் பன்முக ஆளுமை – முனைவர் சங்கீதா சரவணன்

42. கலைஞரின் பயண அனுபவங்கள் – முனைவர் சு.சுஜாதா

43. கலைஞரின் திரை இசை அமுது – முனைவர் தி.வ.சந்திரிகா

44. கலைஞர் அந்தாதி – பாவரசு வதிலை பிரதாபன்

45. கலைஞர் கவிதைகளில் இலக்கியச் செல்வாக்கு – முனைவர் மு.லோகநாயகி

46. கலைஞரின் சட்டமன்றச் சொற்பொழிவுகள் – முனைவர் சு.பாரதிராணி

47. போற்றதும் போற்றதும் கலைஞரை போற்றதும் – முனைவர் கே.ராதா

48. பேராசிரியரின் பார்வையில் கலைஞர் – முனைவர் தெ.வாசுகி

49. கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா – முனைவர் இரா.கோடீஸ்வரி

50. கலைஞரின் ஆட்சியில் கணினித்தமிழ் – முனைவர் இரா.இந்து

51. கலைஞரின் சிறுகதைகளில் சீர்திருத்தச் சிந்தனைகள் – முனைவர் ச.பொன்ஜெயந்தி

52. கலைஞரின் சிறுகதைகளில் தொன்மம் – முனைவர் வெ.இராணி

53. கலைஞரும் முடியரசரும் – முனைவர் ப.சு.செல்வமீனா

54. கலைஞரின் முரசொலியில் கொள்கை முழக்கங்கள் – முனைவர் வெ.அமுதா

55. கலைஞரின் மொழிப்பற்றும் இனப்பற்றும் – முனைவர் சு.உமாதேவி

56. நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கலைஞரின் நினைவுகள் – முனைவர் சித்ரா ஆசைத்தம்பி

57. கலைஞரின் பொன்மொழிகள் – முனைவர் இரா.நாகேஸ்வரி

58. கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள் – முனைவர் அ.ஜெயராஜ்

59. கலைஞர் ஒரு புரட்சியாளர் – முனைவர் பொ.திராவிட பிரேமா

60. கலைஞரின் கடிதங்களில் இலக்கிய மேற்கோள்கள் – முனைவர் தி.இராதா

61. கலைஞரின் நாடகங்களில் தமிழும் தமிழ்மக்களும் – ம.ஜெகதீசுவரி

62. கலைஞர் ஒரு பல்கலைக்கழகம் – பேரா. மு.நளா

63. கலங்கரை விளக்கமாய் கலைஞரின் பொன்மொழிகள் – முனைவர் அ.மரியசெசிலி

64. ஆய்வுநோக்கில் கலைஞரின் ரோமாப்புரி பாண்டியன் – முனைவர் ப.செ.முத்துலெட்சுமி

65. இளைஞர்களுக்கு கலைஞரின் ஆத்திசூடி – கவிஞர் க.முகில்வேந்தன்

66. கலைஞரின் காலக்குறிப்புகள் (வினா-விடை) – ந.நல்லய்யன்

67. கலைஞரின் கதைகளில் மனிதநேயம் – முனைவர் ம.ஆனந்தவள்ளி

68. அறிஞர் அண்ணா வழியில் கலைஞர்– பேரா. கோ.இராஜலெட்சுமி

69. கலைஞரின் புதினங்களில் பண்பாட்டுச் சிந்தனைகள் – பேரா. வெ.சுமதி

70. கலைஞரின் வரலாற்று உணர்வுகள் – முனைவர் ஷீலா சீனிவாசன்

71. கலைஞர் நாடகங்களில் தமிழ்ப்பண்பாடு – முனைவர் க.புஷ்பலதா

72. கலைஞரின் குறளோவியம் பன்முகப் பார்வை – முனைவர் நயம்பு.அறிவுடை நம்பி

73. கலைஞரின் சங்கத்தமிழ் மரபும், மாண்பும் – முனைவர் ச.பிரியா

74. கலைஞரின் முத்தமிழ்க் கலைப்பணிகள் – கவிஞர் ப.கதிர்பாரதி

75. கலைஞரின் படைப்பாளுமைத்திறன் – முனைவர் மு.கவிதா

76. கலைஞரின் திருக்குறள் உரைத்திறன் – முனைவர் கோ.கிருட்டிணமூர்த்தி

77. தொல்காப்பியம் சூடிகொடுத்த கலைஞர் – முனைவர் தாமரை

78. கலைஞரின் சிறுகதைகளில் பண்பாடு – முனைவர் மா.பாப்பா

79. கலைஞரின் சிலப்பதிகார நாடகக் காப்பியம் – முனைவர் செ.கற்பகம்

80. கலைஞர் கடிதங்களில் நடையும் கொடையும் – முனைவர் இரா.சிவகுமார்

81. கலைஞரின் நாடகங்களில் இலக்கிய ஆளுமை – முனைவர் சீ.மகேஸ்வரி

82. கலைஞரின் விழுமிய கதை மாந்தர்கள் – முனைவர் த.கண்ணகி

83. கலைஞரின் கடிதங்களில் மொழிவளம்– முனைவர் சே.தெய்வக்கன்னி

84. கலைஞரின் கவிதைக்கலை – முனைவர் சு.சொர்ணரேகா

85. கலைஞரும் இராமானுஜரும்– முனைவர் கே.எஸ்.பிரணார்த்திகரன்

86. கலைஞரும் இளங்கோவடிகளும் – முனைவர் யு.ஜெயபாரதி

87. கலைஞரின் வரலாற்று நாவல்கள் – பேரா. மு.புஷ்பா

88. கலைஞரின் வரலாற்று நோக்கில் தென்பாண்டிச் சிங்கம் – முனைவர் பா.சுமத்திரா

89. கலைஞரின் நெஞ்சுக்குநீதியில் காலமும் கருத்தும் – கவிஞர் க.முகில்வேந்தன்

90. நெஞ்சுக்கு நீதியில் கலைஞரின் அனுபவங்கள் – முனைவர் த.உமாராணி

91. கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை – முனைவர் சுகன்யா சுரேஷ்குமார்

92. A RHETORICAL STUDY OF KALAIGNAR'S SANKATH TAMIZH – Dr. R. ELAVARASU

93. கலைஞர் உலா - வாழ்த்துப்பாமாலை – பாவலரேறு ச.பாலசுந்தரனார்

94. கவிச்சூரியன் கலைஞர் – கவிஞர் சொற்கோ கருணாநிதி

95. கலைஞரின் கவித்துவமும் கலைப்பணிகளும் – முனைவர் த.ஜான்சிராணி

96. கல்வி மேம்பாட்டில் கலைஞர் – முனைவர் கே.ஆர்.கமலா முருகன்

97. கலைஞரும் கவின்மிகு தமிழும் – முனைவர் சு.பாஸ்கர்

98. கலைஞர் ஓர் இதழாசிரியர் – முனைவர் க.பேபி

99. கலைஞர் படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள் – முனைவர் சி.கண்மணி

100. கலைஞர் பேனா பேசுகிறது – விஜயலெட்சுமி நரேந்திரன்

இந்த 100 நூல்களைப் படைத்தவர்களில் 62 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story