10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்


10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை  தேர்வு தேதி மாற்றம்
x
தினத்தந்தி 30 Jan 2023 7:03 AM GMT (Updated: 30 Jan 2023 7:31 AM GMT)

10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் எனவும் ஏற்கெனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பிளஸ் 1 தேர்வு முடிவு மே19ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும் வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

அதுபோல 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story