மெட்ரோ ரெயிலில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணம்..!


மெட்ரோ ரெயிலில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணம்..!
x

மெட்ரோ ரெயிலில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மற்றும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 28.06.2023 அன்று 2,95,509 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023. மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25,15,727 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,81,995 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3.98.131 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,085 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,938 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும். சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story