மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள் பறிமுதல்

மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ராமையா ஆகியோர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 2 சரக்கு வேன்களில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் சரக்கு வேன்களை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து அந்த 2 சரக்கு வேன்கள் மற்றும் 2 யூனிட் மணலை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





