இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி


இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 20). இவர் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் அருகே மினி டெம்போவில் சென்று கொண்டிருந்தார். அப்போது மினி டெம்போ தடுமாறி அருகில் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.

இதில் ஹரி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39) இவர் வடக்குப்பட்டு பகுதியில் கட்டப்படும் வீடுகளில் எலக்ட்ரீசியனுக்கு உதவியாளராக கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நதியா (வயது 30). இவர் தனியார் தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் மனைவியை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சரவணன் வடக்குப்பட்டு பகுதியில் இருந்து ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிங்கபெருமாள் கோவில் ஒரகடம் செல்லும் சாலையில் தொழிற்சாலையில் இருந்து ஒரகடம் நோக்கி செல்ல வெளியே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story