லஞ்சப் புகாரில் போக்குவரத்துக்கழக பணியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


லஞ்சப் புகாரில் போக்குவரத்துக்கழக பணியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

லஞ்சப் புகாரில் போக்குவரத்துக்கழக பணியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். இங்கு முதுநிலை மெக்கானிக்காக பணியாற்றிவந்த அன்பழகன் (வயது 63) என்பவர், மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய டெப்போவில் அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவராகவும் இருந்துவந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு இவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விரும்பிய வழித்தடத்தை பெற்றுத்தருவதாகவும், அனுமதி இல்லாமல் விடுப்பில் சென்றதற்காக வழங்கப்பட்ட 'மெமோ'வை ரத்து செய்து தருவதாகவும் புருஷோத்தமனிடம் கூறி உள்ளார்.

இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சப்பணத்தை கொடுக்கவில்லை என்றால் எண்ணூர் டெப்போவுக்கு மாற்றம் செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து புருஷோத்தமன் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி முதல்கட்டமாக லஞ்சப்பணம் ரூ.2 ஆயிரத்தை புருஷோத்தமன் கொடுத்தபோது அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அன்பழகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story