கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்கியது
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஜூன் 22-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணு உலையில் ஏற்பட்ட பழுதினை விஞ்ஞானிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.50 மணி அளவில் பழுது சரி செய்யப்பட்டு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 370 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story