நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்...!


நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்...!
x

நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகளை மத்திய அரசு உடனடியாக நீக்கியது.

சென்னை,

டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், நிலக்கரி ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. ஏப்.24ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட ஏல பட்டியலிலிருந்து 3 பகுதிகள் நீக்கம் செய்துள்ளது.

மார்ச் மாதம் வெளியிடப்பட்ட, ஏல பட்டியலில் தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 101 இடங்கள் இடம் பெற்றிருந்தன. பட்டியலில் இருந்து தமிழ்நாடுப் பகுதிகளை நீக்க கோரி பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story