வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
x

தேன்கனிக்கோட்டை பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

பெண்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பாஞ்சாலி (வயது 45). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் நாகராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கண்டகானப்பள்ளி மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது பாஞ்சாலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நெமிலேரியை சேர்ந்தவர் சாந்தகுமார் (26). தொழிலாளி இவர் நேற்று நள்ளிரவு தேன்கனிக்கோட்டையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவர் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சாந்தகுமாருக்கு நேற்று காலை தலைவலி ஏற்பட்டது. இதனால் மீண்டும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் உயிரிழந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர்

தளி அருகே உள்ள தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூடேஷ். இவருடைய மகன் ஹரிஷ் (23). இவர் சம்பவத்தன்று பாலதொட்டனப்பள்ளியில் இருந்து லக்கசந்திரம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story